தேசியம்
செய்திகள்

தடுப்பூசி திட்டங்களை தற்காலிகமாக தாமதப்படுத்த அல்லது இடைநிறுத்த கனடாவின் மூன்று மாகாணங்கள் முடிவு!

COVID தடுப்பூசி திட்டங்களை தற்காலிகமாக தாமதப்படுத்த அல்லது இடைநிறுத்த கனடாவின் மூன்று மாகாணங்கள் முடிவு செய்துள்ளன.

அடுத்த மாதத்தில் கனடாவின் தடுப்பூசி விநியோகத்தை குறைப்பதற்கான Pfizerரின் அறிவித்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.Ontario, Manitoba மற்றும் Alberta ஆகிய மாகாணங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. கனடாவின் அடுத்த மாதத்திற்கான Pfizer தடுப்பூசி ஏற்றுமதி பாதியாகக் குறைக்கப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதனால் தனது தடுப்பூசி திட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய நிலை இந்த மூன்று மாகாணங்களுக்கும் தோன்றியுள்ளது. British Colombia மாகாணமும் விரைவில் இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான கனடியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை அங்கீகரிக்கப்பட்ட Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளில் 822,000க்கும் மேற்பட்டவை இதுவரை மாகாணங்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Related posts

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த கனடாவின் பணவீக்கம்

Lankathas Pathmanathan

தடுப்பூசிகளின் கட்டுப்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் கவலை

Gaya Raja

நெடுந்தெரு 401இன் கீழ் 60 KM சுரங்கப் பாதை?

Lankathas Pathmanathan

Leave a Comment