தேசியம்
செய்திகள்

குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கும் திட்டம் இல்லை: Dr. Theresa Tam

குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கும் திட்டம் தற்போது இல்லை என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam கூறினார்.

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா ஆகியன அண்மையில் குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்தன.

ஆனாலும் கனடாவில் இதனை ஒரு பொது சுகாதார அவசர நிலையாக அறிவிப்பதில் நன்மை இல்லை என Tam கூறினார்.

கனடாவின் பிராந்திய, மாகாண பொது சுகாதார அதிகாரிகளின் கட்டமைப்பை அதற்கான காரணமாக அவர் சுட்டிக் காட்டினார்.

அவசரகால அறிவிப்பு அவசரகாலச் சட்டத்தை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

ஏற்கனவே குரங்கம்மை தொற்றை எதிர்கொள்வதற்கு கனடா நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் Tam குறிப்பிட்டார்.

கனடாவில் இதுவரை 1,059 குரங்கம்மை தொற்றுகள் பதிவாகியுள்ளன.

Related posts

Toronto நகர முதல்வர் வேட்பாளருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் கடுமையான குளிர் நிலை

Lankathas Pathmanathan

Luka Magnotta சிறை மாற்றம் குறித்து எழும் கேள்விகள்

Lankathas Pathmanathan

Leave a Comment