பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு அரசுகளின் பட்டியலில் இருந்து சிரியாவை கனடிய மத்திய அரசாங்கம் நீக்கியுள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை (05) ஒரு செய்தி குறிப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டது.
அமைதியான அரசியல் மாற்றத்தை நோக்கி சிரிய இடைக்கால அரசாங்கம் எடுத்துள்ள நேர்மறையான நடவடிக்கைகளை கனடா வரவேற்கிறது என வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான, வளமான எதிர்காலத்திற்கான சிரிய மக்களின் முயற்சியில் கனடா உறுதியாக உள்ளது எனவும் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
கனடிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பயங்கரவாத நிறுவனங்கள் பட்டியலில் இருந்து Hay’at Tahrir al-Sham (HTS) அமைப்பும் நீக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
LJI Reporter ரம்யா சேது
