தேசியம்
செய்திகள்

இரண்டாவது COVID booster தடுப்பூசிகளை வழங்க மாகாணங்கள் தயாராக வேண்டும்: NACI

இரண்டாவது COVID booster தடுப்பூசிகளை வழங்க மாகாணங்கள் தயாராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை (05) இந்த பரிந்துரையை வெளியிட்டது.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்ட காலப் பராமரிப்பில் உள்ளவர்கள், வரும் வாரங்களில் நான்காவது தடுப்பூசியை பெற மாகாணங்களும் பிராந்தியங்களும் தயாராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

70 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது booster தடுப்பூசியை NACI கடுமையாகப் பரிந்துரைத்துள்ளது.

மேலும் First Nations, Metis, Inuit சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இரண்டாவது booster வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

March 27 வரை, 18 வயதுக்கு மேற்பட்ட கனேடியர்களில் ஏறத்தாழ 90 சதவீதம் பேர் கனடாவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் கருதப்படுகிறது.

ஆனாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 57 சதவீதம் பேர் booster தடுப்பூசியை பெற்றுள்ளனர் என கனடாவின் பொது சுகாதார முகமையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Related posts

தமிழர் சமூகத்தின் பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிக்கும் நாள் இது – சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தி கனடிய பிரதமர்

Gaya Raja

கனடா- இந்தியா இருதரப்பு உறவை Justin Trudeau சிதைத்து விட்டார்: இந்திய உயர் ஸ்தானிகர் குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan

இந்தியாவின் முக்கிய இராஜதந்திரி கனடாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment