தேசியம்
செய்திகள்

இலங்கையில் ராஜபக்ச அரசை ஆட்சியில் இருந்து அகற்ற கோரி கனடாவில் போராட்டம்

இலங்கையில் ராஜபக்ச அரசை ஆட்சியில் இருந்து அகற்ற கோரும் போராட்டம் British Colombia மாகாணத்தின் Vancouver நகரில் நடைபெற்றது.

Vancouver நகரின் downtown பகுதியில் ஒன்றுகூடிய 200 இலங்கை-கனடியர்கள், தங்கள் தாயகத்தில் உள்ள அரசாங்கத்தை அகற்றுமாறு வலியுறுத்தினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

இலங்கையில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி, மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண உதவுமாறும் பேரணியில் பங்கேற்றவர்கள் கனடாவை வலியுறுத்தினர்.

இலங்கைக்கான பயண ஆலோசனை ஒன்றை கனடிய வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள் அதிக அளவு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடிய அரசாங்கம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Liberal தலைமைக்கு போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கிறோம்!

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் இருந்து கனேடியர்களுடன் முதலாவது விமானம் பயணம்!

Lankathas Pathmanathan

மருத்துவ, மத காரணங்களுக்காக தடுப்பூசி போடாதவர்களுக்கு கடவுச்சீட்டு திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட மாட்டாது!

Gaya Raja

Leave a Comment