தேசியம்
செய்திகள்

September இறுதிக்குள் அனைத்து கனடியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்: பிரதமர் Trudeau

கனடாவுக்கான COVID தடுப்பூசி விநியோகத்தில் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என அச்சுறுத்தல்கள் வெளியாகும் நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் நிலைமை கவலைக்குரியது என கூறிய பிரதமர், கனடா March மாத இறுதிக்குள் வாக்குறுதியளித்த அனைத்து தடுப்பூசிகளையும் பெறும் என நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்தார்.

இந்த மாதம் Pfizer தடுப்பூசி விநியோகத்தில் கடும் சரிவு எதிர்கொள்ளப்பட்டாலும் September இறுதிக்குள் கனடாவில் தடுப்பூசிகளை பெற விரும்பும் அனைத்து கனடியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் பிரதமர் Trudeau கூறினார்.

Related posts

Hamilton நகரப் பேருந்து மோதியதில் ஏழு வயது குழந்தை பலி

Lankathas Pathmanathan

Stratford துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் காயம்

Lankathas Pathmanathan

இலங்கையில் கனடிய தமிழர் மீது வாள்வெட்டு – கனடிய தமிழரான பிரதான சூத்திரதாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் திறந்த பிடியாணை!

Lankathas Pathmanathan

Leave a Comment