தேசியம்
செய்திகள்

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளர் பிணையில் விடுதலை

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளரான Tamara Lich திங்கட்கிழமை (07) காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கடந்த வாரம் நடைபெற்ற பிணை விசாரணையின் பின்னர் அவர் சிறையில் இருந்து திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவரது விடுதலையை மறுத்த முந்தைய நீதிபதி சட்டத்தில் தவறு செய்ததாக Ontario நீதிபதி தீர்ப்பளித்தார்.
Albertaவின் குடியிருப்பாளர் Lich 25 ஆயிரம் டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் Ottawaவிலிருந்து 24 மணி நேரத்திற்குள்ளும், Ontarioவிலிருந்து 72 மணி நேரத்திற்குள்ளும் வெளியேற வேண்டும் என நீதிபதி பிணை விடுதலையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கனேடிய பாதுகாப்பு படைகளின் முன்னாள் தலைவர் மீது குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது!

Gaya Raja

உக்ரைன் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க கனடா உதவும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan

இறையாண்மை குறித்த வாக்கெடுப்புக்கு அழைப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment