தேசியம்
செய்திகள்

மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை வெளியிட்ட Quebec

Quebec மாகாணம் மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளது.
Quebec முதல்வர் François Legault மீண்டும் திறக்கும் திட்டத்தை வெளியிட்டார்.

தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் தனது அறிவித்தலின் போது கூறினார்.

முகமூடி உத்தரவுகளை நீக்கவோ, தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை முடிவுக்கு கொண்டு வரவோ தனது அரசாங்கம் தயாராக இல்லை என அவர் கூறினார்.

இவை இரண்டும் குறைந்தது March 14 வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அதன் பின்னர் அவை மறுமதிப்பீடு செய்யப்படும் எனவும் Legault தெரிவித்தார்

தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

Rafah தாக்குதல்கள் குறித்து கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

Markham நகர விபத்தில் இரண்டு தமிழர்கள் மரணம்

Lankathas Pathmanathan

0.5 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தும் கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment