தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பெறாத உறுப்பினர்களை பதவி விலத்தும் கனடிய இராணுவம்

COVID தடுப்பூசி பெறாத உறுப்பினர்கள் சிலரை கனடிய இராணுவம் பதவி விலக்கியுள்ளது.
தவிரவும் மேலும் நூற்றுக் கணக்கானவர்களின் பதவி விலகல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கனேடிய ஆயுதப்படையின் ஐம்பத்தெட்டு முழு நேர உறுப்பினர்கள் தங்கள் தடுப்பூசிகளை பெற மறுத்ததற்காக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மேலும் 246 பேருக்கு பதவி விலகளுக்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
COVID தொற்றின் பரவலில் இருந்து ஆயுதப் படைகளை பாதுகாக்க அனைத்து இராணுவ உறுப்பினர்களும் October நடுப்பகுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற வேண்டும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த காலக்கெடு December நடுப்பகுதி வரை நீட்டிக்கப்பட்டது.

கனேடிய ஆயுதப்படையினரில்  98 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

மற்றொரு அரச குடும்பம் கனடாவுக்கு பயணம்?

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை: Pierre Poilievre

CERB கொடுப்பனவு பெற்ற சுயதொழில் செய்பவர்கள் அதனை திருப்பிச் செலுத்த நிர்பந்திக்கப்பட மாட்டார்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment