தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பெறாத உறுப்பினர்களை பதவி விலத்தும் கனடிய இராணுவம்

COVID தடுப்பூசி பெறாத உறுப்பினர்கள் சிலரை கனடிய இராணுவம் பதவி விலக்கியுள்ளது.
தவிரவும் மேலும் நூற்றுக் கணக்கானவர்களின் பதவி விலகல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கனேடிய ஆயுதப்படையின் ஐம்பத்தெட்டு முழு நேர உறுப்பினர்கள் தங்கள் தடுப்பூசிகளை பெற மறுத்ததற்காக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மேலும் 246 பேருக்கு பதவி விலகளுக்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
COVID தொற்றின் பரவலில் இருந்து ஆயுதப் படைகளை பாதுகாக்க அனைத்து இராணுவ உறுப்பினர்களும் October நடுப்பகுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற வேண்டும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த காலக்கெடு December நடுப்பகுதி வரை நீட்டிக்கப்பட்டது.

கனேடிய ஆயுதப்படையினரில்  98 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

புதிய குடிவரவாளர்களுக்கு எதிராக Ontario முதல்வர் கருத்து!

Lankathas Pathmanathan

Alberta தேர்தல் முடிவு குறித்து அரசியல்வாதிகள் கருத்து

Lankathas Pathmanathan

நோய் அபாயத்தில் உள்ளவர்கள் booster தடுப்பூசியை  பெற வேண்டும்!

Lankathas Pathmanathan

Leave a Comment