தேசியம்
செய்திகள்

கனடாவில் நூற்றுக்கணக்கான போலி COVID சோதனைகள் முடிவுகளும், தடுப்பூசி ஆவணங்களும்

நூற்றுக்கணக்கான போலி COVID சோதனைகள் முடிவுகளையும், தடுப்பூசி ஆவணங்களை CBSA இடை மறித்துள்ளது.

கனடிய எல்லை பாதுகாப்பு நிறுவனம் நூற்றுக்கணக்கான பொய்யான அல்லது மோசடியான COVID சோதனை முடிவுகள் மற்றும் தடுப்பூசி சான்றுகளை  இடை மறித்ததாக கூறுகிறது.

January 7 முதல் October 31 வரையிலான கால எல்லையில், CBSA 374 போலி சோதனை முடிவுகளை இடை மறித்துள்ளது.

இவற்றில் விமான நிலையங்களில் 160, தரை எல்லைகளில் 187 என போலி சோதனை முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

July 5 முதல் October 31 வரையிலான கால எல்லையில் 92 போலி தடுப்பூசி ஆவணங்களையும்  CBSA இடை மறித்துள்ளது.

இவர்கள் அனைவரும் கனடாவின் பொது சுகாதார நிறுவனத்திடன் மேலதிக மதிப்பீடு மற்றும் சாத்தியமான அமலாக்கத்திற்காக பரிந்துரைக்கப்பட்டனர் என CBSA ஒரு அறிக்கையில் தெரிவித்தது

Related posts

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

Lankathas Pathmanathan

பயங்கரவாத சந்தேக நபர் மாணவராக கனடாவிற்குள் நுழைந்தார்?

Lankathas Pathmanathan

March இறுதிக்குள் Ontarioவில்நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 4,000 வரை அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment