தேசியம்
செய்திகள்

Saskatchewan விவசாயி உக்ரைன் சண்டையில் கொல்லப்பட்டார்

Saskatchewan விவசாயி ஒருவர் உக்ரைனில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

33 வயதான Joseph Hildebrand உக்ரைனில் கொல்லப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்தார்.

அவரது படைப்பிரிவில் உள்ள வேறு சிலரால் குடும்பத்தினருக்கு இந்த தகவல் அறிவிக்கப்பட்டது.

உக்ரைனில் கனேடிய குடிமகன் ஒருவரின் மரணம் குறித்து அறிந்திருப்பதாக அறிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.

உள்ளூர் அதிகாரிகளுடனும் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருப்பதாக ஒரு அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானில் கனேடிய இராணுவத்தில் பணியாற்றிய Hildebrand உக்ரைனுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related posts

Ottawaவில் போராட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள்ள கைது!

Lankathas Pathmanathan

திங்கள் வரை தொடரும் முன்கூட்டிய வாக்களிப்பு!

Lankathas Pathmanathan

தேர்தலில் வெற்றி பெற Conservative கட்சி மிதமான நகர்வுகளை எடுக்க வேண்டும்?

Lankathas Pathmanathan

Leave a Comment