December 13, 2025
தேசியம்
செய்திகள்

British Colombiaவில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் மரணம்

British Colombia மாகாணத்தின் Abbotsford நகரில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் இறந்துள்ளன.

வெள்ளப் பெருக்கினால் சுமார் 500 கால் நடைகள் இறந்துள்ளதாக முதற்கட்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக BC பால் பண்ணை சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரக்கூடும் என சங்கம் ஒரு  அறிக்கையில் எச்சரிக்கின்றது.

இப்பகுதியில் உள்ள சுமார் 23,000 கால்நடைகளில், 6,000 கால்நடைகள் வெள்ளப்படுதியிலிருந்து வேறு பண்ணைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

சுமார் 16,000 கால்நடைகள் தங்கள் சொந்த பண்ணைகளில் தங்கியிருப்பதாக சங்கம் கூறுகிறது.

Related posts

கனடாவில் மயில்வாகனம் நிமலராஜனின் இருபத்தைந்தாவது ஆண்டு நினைவேந்தல்

Lankathas Pathmanathan

மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு கனேடிய குழு பயணம்

Lankathas Pathmanathan

எதிர்க்கட்சிகளுடன் இந்த வாரம் கலந்துரையாடும் பிரதமர்

Gaya Raja

Leave a Comment