தேசியம்
செய்திகள்

Ontarioவில் இருவர் AstraZeneca தடுப்பூசியால் ஏற்பட்ட இரத்த உறைவால் பாதிக்கப்பட்டனர்!

AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்ட இரண்டு நபர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர்.  

60 வயதான இருவரே, AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக Ontario மாகாணம் அறிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் Hamilton நகரை சேர்ந்தவர் என தெரியவருகின்றது.

ஆனாலும்  AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் COVID தொற்றால் பாதிக்கப்படுவதை விட அதிகமாக இருப்பதாக Health கனடா தொடர்ந்தும் பரிந்துரைக்கின்றது.18 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை  பயன்படுத்த Health கனடா ஒப்புதல் அளித்தது. இந்த வார ஆரம்பத்தில், Ontario அரசாங்கம் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசியை  வழங்க ஆரம்பித்தது.

Related posts

கனடாவின் நகர்வுகள் அமெரிக்க வர்த்தக இலக்குக்கு முரணானது?

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

Lankathas Pathmanathan

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

Lankathas Pathmanathan

Leave a Comment