தேசியம்
செய்திகள்

COVID தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என எச்சரிக்கை!

COVID தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என எச்சரிக்கப்படுகின்றது.

இன்று (வெள்ளி) வெளியான கனடிய பொது சுகாதார அமைப்பின்  புதிய modelling தரவுகள் மூலம் இந்த தகவல் வெளியானது. கனடாவின் பொது சுகாதார அமைப்பின் புதிய தொற்று திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam, துணை தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Howard Njoo ஆகியோர் இந்த விபரங்களை இன்று வெளியிட்டனர். COVID தொற்றுக்கள்  கனடா முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால், நாடு முழுவதும் தொற்று  மீண்டும் எழுச்சி பெறுவதை தடுக்க தற்போதைய பொது சுகாதார நடவடிக்கைகள் கூட போதுமானதாக இருக்காது என்பதை  தேசிய modelling தரவுகள் காட்டுகின்றது.

கனடாவில் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள்  இதுவரையில் தடுப்பூசியை பெற்றுள்ள நிலையில் கனடியர்கள்  விழிப்புடன் இருக்க வேண்டும் என தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Tam கூறினார்

இந்த நிலையில் நூறாயிரக்கணக்கான COVID தடுப்பூசிகள் வாராந்தம் கனடாவை வந்தடையும் என இன்று பிரதமர்  Justin Trudeau கூறினார்.

Related posts

Ontarioவில் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் மரணம்

Lankathas Pathmanathan

G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் கனடிய பிரதமர்!

Gaya Raja

April மாதத்தில் வீடுகளில் விற்பனை அதிகரிப்பு

Leave a Comment