போலந்தில் ரஷ்யாவின் ஊடுருவலை பொறுப்பற்றது என கனடிய பிரதமர் கண்டித்தார்.
போலந்தில் ரஷ்யாவின் ஊடுருவலை கனடிய பிரதமர் Mark Carney கண்டித்தார்.
இந்த நகர்வு அமைதி முயற்சிகளை முழுமையாக பாதிக்கும் என Mark Carney கூறினார்.
செவ்வாய்க்கிழமை (09) இரவு போலந்து வான்வெளியில் ரஷ்யாவின் ஊடுருவல் பொறுப்பற்றது எனவும் பதட்டமான நிலையை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்தார்.
போலந்து, NATO நட்பு நாடுகளுக்கு கனடாவின் ஆதரவை Mark Carney வெளியிட்டார்.
கனடா இந்த நிலைமையை விழிப்புடன் கவனித்து வருவதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் ரஷ்யா மீது அதிக அழுத்தம் கொடுக்க பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
NATO நிறுவன உறுப்பினராக, போலந்தை ஆதரிக்க வேண்டிய கடமை கனடாவுக்கு உள்ளது என வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
