கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியக்கூறு குறித்து தகவல் வெளியானது.
மத்திய வங்கி அடுத்த மாதம் அதிரடி வட்டி உயர்வை அறிவிக்கலாம் என கணிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டாக மாறாமல் இருக்கும் முக்கிய வட்டி விகிதத்தை மத்திய வங்கி, அடுத்த மாதம் அதிரடியாக அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது நுகர்வோர், கடன் பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Federal Reserve வங்கி, மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக தனது வட்டி விகிதத்தை அண்மையில் அதிகரித்ததை தொடர்ந்து, கனடாவிலும் இந்த வட்டி உயர்வு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கி, கடந்த ஓராண்டாக தனது வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாக மாற்றி அமைக்காமல் தொடர்ந்து தக்கவைத்து வந்துள்ளது.
பணவீக்க அபாயங்கள் இன்னும் தீவிரமடைந்துள்ளதால், வட்டி விகிதங்களை மீண்டும் பலமுறை உயர்த்த மத்திய வங்கி தயாராக உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem எச்சரித்துள்ளார்
இந்த நிலையில் எதிர்வரும் 28-ஆம் திகதி நடைபெறவுள்ள வட்டி விகிதக் கொள்கை கூட்டத்தில், வட்டி மீண்டும் உயர்த்தப்படுமா அல்லது தற்போதைய நிலையே நீடிக்குமா என்பதில் சந்தை முதலீட்டாளர்கள், வர்த்தகர்களிடையே மாற்று கருத்துக்கள் உள்ளன.
வியாழக்கிழமை (17) நிலவரப்படி, வட்டி உயர்வுக்கு சாதகமாகவே சந்தை புள்ளிகள் நகர்ந்துள்ளன.
அமெரிக்கப் பொருளாதார தாக்கம், ஈரான் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியன இந்தத் திடீர் பதற்றத்திற்கு பின்னுள்ள காரணங்களாக உள்ளன.
