கனடாவின் முடிவுகளை யாரும் தீர்மானிக்க முடியாது என ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கனடிய பிரதமர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) சிறப்புரை ஆற்றிய Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-பின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
உண்மையான இறையாண்மைக்கு நெகிழ்வுத்தன்மை அவசியம் என தனது உரையில் குறிப்பிட்ட Mark Carney, கனடாவும் ஐரோப்பாவும் “இணைந்து செயல்படும் போது இன்னும் வலிமையானவர்களாக மாறுவோம்” என உலகிற்கு பறை சாற்றியுள்ளார்.
இந்த நிலையில் கனடிய பிரதமரின் உரை குறித்து கனடாவிலும் உலகளாவிய ரீதியிலும் தலைவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ எதிர்வினைகளை வெளியிட்டு வருகின்றனர்.
கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய ‘இணை உறுப்பினர்’ அந்தஸ்தை நோக்கி நகர்வதை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கடுமையாகச் சாடியுள்ளார்.
Donald Trump-பின் இந்தத் தன்னிச்சையான அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்காவிற்குள்ளேயே எதிர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பிரதிநிதிகள் கனடாவின் இந்த நகர்வை வரவேற்றுள்ளனர்.
அமெரிக்காவின் பொருளாதார ஏகபோகத்துக்கு எதிராக கனடாவிற்கு ஒரு பாதுகாப்பான வர்த்தக அரணாக ஐரோப்பா விளங்கும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஆனாலும் கனடாவில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre பிரதமர் Mark Carney-யின் இந்த உத்தியைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
கனடியர்களும் தெரியாமல் Mark Carney ஐரோப்பியச் சட்டங்களை இங்கு இறக்குமதி செய்ய முயல்வதாக அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
