இணையவழித் தாக்குதல்களைக் கைவிட்டு, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேலும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அமெரிக்க அதிகாரிகளுக்குப் கனடிய பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இரு தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கிண்டல் செய்வதையும், வீண் வம்பளப்பதையும் நிறுத்த வேண்டும் என பிரதமர் Mark Carney கடுமையான தொனியில் எச்சரித்தார்.
தலைநகர் Ottawa-வில் செவ்வாய்க்கிழமை (01) செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
Donald Trump நிர்வாக அதிகாரிகளின் அண்மைய நகர்வுகள் ஆக்கபூர்வமானதாக இல்லை என Mark Carney கூறினார்.
அமெரிக்கா தனது நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுத்தினால் மாத்திரமே இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை தொடரும் எனவும் அவர் எச்சரித்தார்.
பல வாரங்களாக நடைபெற்ற தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், கடந்த மாத இறுதியில் கனடாவும் அமெரிக்காவும் கடைசி நேர வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதில் தோல்வியடைந்தன.
இதன் விளைவாக, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்கள் மீது 50 சதவீத சுங்க வரிகளை விதிக்கும் Donald Trump-பின் புதிய நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது.
இதற்கு பதிலடியாக, September 8 முதல் சுமார் 28 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது கனடா பதிலடி வரி விதிக்கும் என Mark Carney அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
