தேசியம்
செய்திகள்

பிரதமரை கொலை செய்ய மிரட்டல் விடுத்த குற்றத்தை ஒப்புக் கொண்ட Winnipeg நபர்?

இனப்படுகொலையை ஆதரிப்பதற்கும், வேண்டுமென்றே வெறுப்பைத் தூண்டியதற்குமான குற்றத்தை Winnipeg நபர் ஒப்புக்கொண்டார்.

சமூக ஊடகங்களில் தான் வெளியிட்ட பதிவுகளில் தன்னை “தீவிர இனவெறியர்” என அடையாளப்படுத்திக் கொண்ட Winnipeg நகரைச் சேர்ந்த ஒருவர், இனப்படுகொலையை ஆதரிப்பதற்கும், முஸ்லிம்கள், யூதர்களுக்கு எதிராக வேண்டுமென்றே வெறுப்பைத் தூண்டியதற்கும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

Jason Paul Rindall கடந்த வாரம் Manitoba மாகாண நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவர் பிரதமர் Mark Carney-யை அச்சுறுத்தும் வகையிலான பதிவுகள் தொடர்பாக, மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டையும் எதிர்கொண்டார்

April 2025-ல், RCMP அதிகாரிகள் இந்த விசாரணையை ஆரம்பித்தனர்.

அவர் இந்த ஆண்டின் February மாதம் கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு நிதியுதவி தொடர்பாக British Columbia உடன்பாடு

Lankathas Pathmanathan

NDP தலைவரானார் Avi Lewis

Lankathas Pathmanathan

Leave a Comment