குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான விசாரணையை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதில் Whitby நகரைச் சேர்ந்த 23 வயதான மனு சுகுணகுமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அவரது இல்லத்தில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி கைது செய்யப்பட்டார்.
2025-ஆம் ஆண்டு இந்த விசாரணை ஆரம்பமானதாக தெரியவருகிறது.
2026-ஆம் ஆண்டு புலனாய்வாளர்கள், Whitby நகரில் உள்ள சந்தேக நபரின் இல்லத்தில் ஒரு தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அங்கு பல மின்னணு சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
மனு சுகுணகுமார் Durham கல்லூரியின் ஊழியர் எனவும் இவரினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் எனவும் காவல் துறையினர் கவலை தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தை வெளியிட்ட Durham காவல்துறையினர் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கோருகின்றனர்.
அவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிருபிக்கப்படவில்லை.
