போலி உரிமத்துடன் விமானம் ஓட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் Air கனடாவின் முன்னாள் விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Peel பிராந்திய காவல்துறை இந்த கருத்து குறித்த அறிவித்தலை செவ்வாய்கிழமை (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தது.
இதில் கைதாகி குற்றச்சாட்டுகளை எதிர் கொள்பவர் Barrie நகரை சேர்ந்த 59 வயதான Geoffrey Wall என அடையாளம் காணப்பட்டார்.
Air கனடா நிறுவனத்தில் மூன்று தசாப்தங்களாக பணியாற்றிய முன்னாள் விமானியான இவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இவர் Air கனடா விமான நிறுவனத்தில் 27 ஆண்டுகள் பணியாற்றி, 2025-ஆம் ஆண்டில் முன்கூட்டியே ஓய்வு பெற்றார்.
அதே ஆண்டில் கனடா போக்குவரத்துத் துறை அவரது தகுதிகள் குறித்து ஒரு ஒழுங்குமுறை விசாரணையை ஆரம்பித்தது.
போலி உரிமத்தைப் பயன்படுத்தி அவர் சுமார் 900 உள்நாட்டு, சர்வதேச விமானப் பயணங்களை மேற்கொண்டு, மில்லியன் கணக்கான டொலர்களை ஊதியமாக ஈட்டியதாக காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
March 2025-ல், Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஒரு செயல்பாட்டு மதிப்பீட்டின் போது, அவரது போலி சான்றுகள் முதன்முதலில் கண்டறியப்பட்டன.
கனடா போக்குவரத்துத் துறையின் ஒழுங்குமுறை விசாரணை ஆரம்பித்து முடிவடைந்ததை தொடர்ந்து Peel பிராந்திய காவல்துறையின் குற்றவியல் விசாரணை January 2026-இல் நடைபெற்றது.
இந்தச் சம்பவத்தால் பயணிகள் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என Air கனடா நிறுவனம் திங்கட்கிழமை (08) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், தெரிவித்துள்ளது.
Air கனடா நிறுவனத்தில் பணியாற்றிய காலம் முழுவதும், அவர், செல்லுபடியாகும் வர்த்தக விமானி உரிமத்தை கொண்டிருந்த, முழுமையாக பயிற்சி பெற்ற விமானியாக இருந்தார் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதில் கைதானவர் June 29 அன்று Brampton நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
இவருக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிருபிக்கப்படவில்லை.
