தேசியம்
செய்திகள்

புதிய graphite சுரங்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

G7 நாடுகளின் மிகப்பெரிய graphite சுரங்கம் எனக் கூறப்படும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் Mark Carney செவ்வாய்க்கிழமை (19) பங்கேற்றார்.

G7 நாடுகளில் மிகப்பெரியது எனக் கூறப்படும் இந்த புதிய Quebec graphite சுரங்கம் கனடாவை மேலும் வலிமையாக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சுரங்கம் கனடிய பொருளாதாரத்தில் $2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதுடன், 1,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 25 ஆண்டுகளில் ஆண்டு தொறும் 106,000 டன்களுக்கும் அதிகமான இயற்கை  graphite உற்பத்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது கனடாவின் தற்போதைய மொத்த உற்பத்தியை விட எட்டு மடங்கு – அதிகமானது என பிரதமர் கூறினார்.

Related posts

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்து – விமானி மரணம்!

Lankathas Pathmanathan

பாரசீக வளைகுடா நாடுகளை பாதுகாக்க கனடாவின் உதவி கோரப்படலாம்?

Lankathas Pathmanathan

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதை தொடர்ந்து தவிர்க்கும் கனடியர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment