தேசியம்
செய்திகள்

கனடாவுக்கும் சீனாவுக்கு இடையில் மீண்டும் நிரந்தர தொடர்பு?

கனடாவுக்கும் சீனாவுக்கு இடையில் நிரந்தர தொடர்புகளை ஏற்படுத்த கனடிய பிரதமர் உறுதியளித்தார்.

சீனாவின் முதல்வர் Li Qiang உடன் வியாழக்கிழமை (05) நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவை பிரதமர் Mark Carney அறிவித்தார்.

பிரதமரான பின்னர் சீனத் தலைமையுடன் Mark Carney நடத்திய முதல் உரையாடல் இதுவாகும்.

Fentanyl நெருக்கடி, இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகம் குறித்தும் இந்த உரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

சீனாவுக்கும் கனடாவுக்கு இடையிலான அண்மைய அரசியல், வர்த்தக மோதல்களிடையே இரு நாட்டின் தலைவர்களிடையேயான உரையாடல் ஒரு பிரதான நகர்வாக நோக்கப்படுகிறது.

விவசாயம், வேளாண் உணவுப் பொருட்களைப் பாதிக்கும் வர்த்தக சவால்கள் குறித்தும் இந்த உரையாடலில் பிரதமர் Mark Carney கருத்துத் தெரிவித்தார்.

Related posts

தேர்தல் ஒன்றிற்கு தயார்: Bloc Québécois தலைவர் Yves-Francois Blanchet

Lankathas Pathmanathan

கூடுதல் கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் Manitoba மாகாணம்

Gaya Raja

Alberta மாகாண தேர்தல் May 29!

Lankathas Pathmanathan

Leave a Comment