இலங்கைத்தீவின் மக்களுக்கு நீடித்திருக்கும் அமைதிக்காக முன்னெடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனடிய பிரதமர் Mark Carney உறுதியளித்தார்.
தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு கனடிய பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் பொறுப்புக்கூறலை முன்னகர்த்தவும், மனித உரிமைகளை நிலை நிறுத்தவும் கனடா உறுதிபூண்டுள்ளது என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் இணைந்து தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை கடைபிடிக்கிறோம் என ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வெளியாகி தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பிரதமரின் அறிக்கை குறிப்பிடுகிறது.

2022-ஆம் ஆண்டு கனடிய நாடாளுமன்றம் May 18-ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏக மனதாக அங்கீகரித்ததை பிரதமரின் அறிக்கை நினைவு கூர்ந்தது.
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை இனப்படுகொலை என அங்கீகரித்தமை துயர் படிந்த வரலாற்றை ஏற்றுக் கொள்வதன் ஒரு முக்கிய படியை பிரதிபலிக்கிறது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கனடிய பிரதமரின் 2026 தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அறிக்கை:
ஆங்கிலத்தில்

பிரெஞ்சு மொழியில்

