கனடிய வாகனத்துறை சவால்களை எதிர்கொள்வதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
அமெரிக்க வரிகள் காரணமாக கனடிய வாகனத்துறை “சவால்களை” எதிர்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார்.
Ontario மாகாணத்தில் $15 பில்லியன் மதிப்பிலான மின்சார வாகனத் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை Honda நிறுவனம் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளதாக இந்த வாரம் செய்தி வெளியானது.
இந்த நிலையில் பிரதமர் கருத்து வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய நிதி துறை செய்தி ஊடகமான Nikkei Asia செவ்வாய்க்கிழமை (05) இந்த செய்தியை வெளியிடாது.
மின்சார வாகனங்களுக்கான தேவை குறைந்து வருவதால்,இந்த நடவடிக்கையை Honda எடுத்துள்ளதாக Nikkei Asia கூறுகிறது.
Honda அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத இந்த செய்தி, கனடாவின் வாகனத் துறை உத்திக்கு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாக அமைகிறது.
இந்த செய்தியை உறுதிப்படுத்தாத கனடிய நிதி அமைச்சர் Francois-Philippe Champagne, மின்சார வாகனங்களுக்கு மாறுவதில் உலகம் முழுவதும் “ஒரு தாமதம் இருப்பதாகத் தெரிகிறது” என கூறினார்.
அதேவேளை உலகளாவிய வாகனத் துறை “கணிசமான மாற்றத்தை” சந்தித்து வருவதாக தொழில்துறை அமைச்சர் Melanie Joly அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் கனடாவை மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டமே இதற்கான காரணம் என Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டினர்.
Ontario மாகாணத்தின் Alliston நகரில் நிறுவ திட்டமிடப்பட்ட Honda தொழிற்சாலை, 2028 முதல் ஆண்டுக்கு 240,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நோக்கம் கொண்டிருந்தது.
ஆனாலும், மின்சார வாகனங்களுக்கான தேவை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்த காரணத்தால், Honda நிறுவனம் 2025 May மாதம் இந்த தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது,
இந்தத் திட்டம் கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாகக் கருதப்பட்டது.
கடந்த ஆண்டில், கனடாவின் முன்மொழியப்பட்ட மின்சார வாகன விநியோகச் சங்கிலி கிட்டத்தட்ட முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது வாகனத் துறை அல்லாத பிற துறைகளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
