தேசியம்
செய்திகள்

Lebanon கனடிய தூதரக ஊழியர்கள் தொடர்ந்தும் பணியில் உள்ளனர்

ஈரானில் அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்கள் மத்தியில், கனடிய தூதரக ஊழியர்கள் தொடர்ந்தும் Lebanon-னில் இருப்பதாக கனடிய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Lebanon தலைநகரில் இருந்து அத்தியாவசியமற்ற ஊழியர்களை அமெரிக்கா மீள அளித்துள்ள நிலையிலும் கனடிய தூதரக ஊழியர்கள் அங்கு தொடர்ந்தும் கடமையில் உள்ளதாக கனடிய விவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Beirut-டில் உள்ள கனடா தூதரகம் வழமை போல் செயல்பட்டு வருவதை உறுதிப்படுத்திய கனடிய வெளிவிவகார அமைச்சு, கனடியர்களுக்கு தூதரக ஆதரவு உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்க கனடிய ஊழியர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து அங்கு தங்கியுள்ளனர் எனவும் கூறியது.

உள்ளூர் நிலைமைகளை அவதானித்து வருவதாக கூறும் கனடிய வெளிவிவகார அமைச்சு, கனடாவின் இராஜதந்திர ஊழியர்கள், அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பு எப்போதும் கனடா அரசாங்கத்திற்கு முன்னுரிமையாக இருந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

Related posts

கனேடிய சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு உள்ளதாக Trudeau குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan

Manitoba அனைத்து கட்டுப்பாடுகளையும் March 15 முடிவுக்கு கொண்டுவருகிறது

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கனடிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment