உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் நான்காவது ஆண்டு நிறைவையொட்டி உக்ரைனுக்கு 2 பில்லியன் டொலர் நிதியுதவியை கனடிய பிரதமர் அறிவித்தார்.
உக்ரைனுக்கு 2 பில்லியன் டொலர் இராணுவ உதவியை அறிவித்த பிரதமர் Mark Carney, ரஷ்யாவிற்கு எதிராக மேலதிக தடைகளை விதிக்கவும் உறுதியளித்துள்ளார்.
இந்த தடைகள், ரஷ்ய எண்ணெய் விற்பனை மீதான தடைகளை தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள 100 கப்பல்களை உள்ளடக்கியது.
ரஷ்யா உக்ரைன் மீது அதன் முழு அளவிலான படையெடுப்பை ஆரம்பித்து நான்கு ஆண்டுகளை குறிக்கும் செவ்வாய்க்கிழமை (24) பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியானது.
“இந்தப் போரில் நாம் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் எனத் தெரிவித்த கனடிய பிரதமர் அங்கு அமைதிக்கான சாத்தியம் உள்ளது,” எனவுmஒரு அறிக்கையில் கூறினார்.
கனடா உக்ரைனை “நீண்ட காலத்திற்கு” ஆதரிக்கும் எனவும் Mark Carney கூறினார்.
