நான்கு பயங்கரவாத அமைப்புகளை கனடிய அரசாங்கம் புதிதாக பட்டியலிட்டுள்ளது.
கனடிய குற்றவியல் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் கனடிய அரசாங்கம் நான்கு புதிய குழுக்களை இணைத்துள்ளது.
கனடிய அரசின் இந்த முடிவை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி புதன்கிழமை (10) ஒரு அறிக்கையில் வெளியிட்டார்.
இதில் 764, Maniac Murder Cult, Terrorgram Collective, Islamic State-Mozambique ஆகியவை அடங்குகின்றன.
இந்த நடவடிக்கைகள் கனடியர்களை பயங்கரவாதச் செயல்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றது என அரசாங்கத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
LJI Reporter ரம்யா சேது
