பாலஸ்தீன அரசை கனடா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது மத்திய கிழக்கில் அமைதியை நோக்கிய ஒரு நகர்வு மட்டுமே என வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக கனடிய பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (21) அறிவித்தார்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் கனடா பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து கனடா நகர்வுகளை முன்னெடுத்து வருவதாக அனிதா ஆனந்த் கூறினார்.
மத்திய கிழக்கில் அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட கனடாவின் வெளியுறவுக் கொள்கை இஸ்ரேலை நோக்கி உள்ளது என்பதை வலியுறுத்த விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பாலஸ்தீனத்தை கனடா அங்கீகரிக்கும் என பிரதமர் Mark Carney கடந்த July மாதம் அறிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடர் புதன்கிழமை (24) வரை நீடிக்கின்றது.
