பாலஸ்தீன அரசை கனடா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது குறித்து மாறுபட்ட விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக கனடிய பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (21) அறிவித்தார்.
இந்த நிலையில் பாலஸ்தீன அரசை முன்கூட்டியே அங்கீகரிப்பதன் மூலம் கனடா சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்துள்ளதாக யூத குழுவான B’nai Brith கனடா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கனடாவின் இந்த அங்கீகாரத்தை “உண்மையான கொள்கை வெற்றி” என மத்திய கிழக்கில் நீதி மற்றும் அமைதிக்கான கனடியர்கள் என்ற அமைப்பு வரவேற்றுள்ளது.
கனடிய முஸ்லிம்களின் தேசிய சபை இந்த அறிவித்தல் வெளியான ஞாயிற்றுக்கிழமையை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அறிவித்தது.
தற்போதைய சூழலில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடாவின் முடிவால் ஏமாற்றமடைந்துள்ளதாக கனடாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நேரடி பேச்சுவார்த்தை, பரஸ்பர அங்கீகாரம் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இந்த முடிவை மாற்றியமைக்குமாறு இஸ்ரேலிய தூதரகம் Mark Carney அரசாங்கத்தை கோரியது.
இந்த விடயத்தில் அங்கீகாரம் மட்டும் போதாது என புதிய ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson ஒரு சமூக ஊடகப் பதிவில் கூறினார்.
பாலஸ்தீனியர்களை வன்முறையில் ஈடுபடுத்தி ஒடுக்கும் பயங்கரவாதிகளுக்கு வெகுமதி அளிக்கும் ஒரு அரசை உருவாக்க Mark Carney முயற்சிப்பதாக Conservative கட்சி இந்த அங்கீகரித்தது குறித்து குற்றம் சாட்டியது.
