போலந்தில் ஆளில்லா விமானங்கள் மூலமான தாக்குதலுக்கு ரஷ்ய தூதரை வரவழைத்து கனடிய வெளிவிவகார அமைச்சு கண்டித்துள்ளது.
இந்த வாரம் போலந்திற்குள் ரஷ்ய ஆளில்லா விமானங்கள் ஊடுருவியது தொடர்பாக, கனடிய வெளிவிவகார அமைச்சு கனடாவுக்கான ரஷ்ய தூதர் Oleg Stepanov-வை வரவழைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (09) முதல் புதன்கிழமை (10) வரை பல ரஷ்ய ஆளில்லா விமானங்கள் போலந்து எல்லைக்குள் நுழைந்ததாக போலந்து தெரிவித்த சில மணி நேரங்களுக்கு பின்னர் கனடாவுக்கான ரஷ்ய தூதர் வரவழைக்கப்பட்டார்.
கனடாவுக்கான ரஷ்ய தூதரை புதன்கிழமை வரவழைத்த கனடிய வெளிவிவகார அமைச்சு, போலந்து வான்வெளியில் ஆளில்லா விமானங்கள் மூலமான தாக்குதல்களுக்கு ரஷ்யாவை அதிகாரப்பூர்வமாக கண்டித்தது என கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
போலந்து வான்வெளியில் ஊடுருவும் ரஷ்யாவின் நகர்வு முழுமையான ஏற்றுக்கொள்ள முடியாதது என அனிதா ஆனந்த் வலியுறுத்தினார்.
இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, பொறுப்பற்றது என அவர் விவரித்தார்.
இந்த விடயம் குறித்து ரஷ்ய தூதரகம் உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
