புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் பதவியேற்றார்.
கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று தமிழர்களில் ஜுனிதா நாதனும் ஒருவராவார்.
தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் Pickering–Brooklin தொகுதியில் போட்டியிட்ட ஜுனிதா நாதன் 38,578 (54.2%) வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானார்.
இவர் நாடாளுமன்ற உறுப்பினராக புதன்கிழமை (21) பதவியேற்றார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னாள் Markham நகரசபையின் ஏழாம் வட்டார உறுப்பினரான ஜுனிதா நாதன், முன்னதாக தனது நகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
