தேசியம்
செய்திகள்

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக $10.5 மில்லியன் பெறும் கனடிய அணி

2022ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக கனடிய அணி 10.5 அமெரிக்க மில்லியன் டொலர்களை பெற்றுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இருந்து கனடிய ஆடவர் அணி ஞாயிற்றுக்கிழமை (27) வெளியேற்றப்பட்டது.

ஆனாலும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக FIFAவிடமிருந்து 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கனடிய அணி பெற்றுள்ளது

ஞாயிறுகுரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4க்கு 1 என்ற goal கணக்கில் கனடிய அணி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் சந்தர்ப்பத்தை கனடிய அணி இழந்துள்ளது.

ஆனாலும் F பிரிவில் கனடிய அணிக்கு ஒரு ஆட்டம் எஞ்சியுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை (01) மொரோக்கோ அணிக்கு எதிராக கனடிய அணியின் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

பேருந்து விபத்துக்கு உள்ளானதில் ஓட்டுநர் மரணம் – சிறுவர்கள் நால்வர் காயம்!

Lankathas Pathmanathan

மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை பெற்று விநியோகிக்கும் பணி தொடர்கிறது: பிரிகேடியர்-ஜெனரல் Krista Brodie

Gaya Raja

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து கனடாவும் அமெரிக்காவும் முடிவெடுக்கும் உரிமை உள்ளது ; Kirsten Hillman தெரிவிப்பு

Gaya Raja

Leave a Comment