கனடாவின் புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்களுக்கு பிரதான அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
28 பேர் கொண்ட கனடாவின் புதிய அமைச்சரவையுடன் 10 மாநிலச் செயலாளர்களும் செவ்வாய்கிழமை பதவியேற்றனர்.
இதில் இரண்டு தமிழர்களுக்கு பிரதான அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழரான அனிதா ஆனந்த் பொறுப்பேற்றார்.
புதிய பொது பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றார்.
இவர்கள் இருவரும் முன்னரும் அமைச்சர் பதவிகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனத்தை பெருமையுடனும், பணிவுடனும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
