திருடப்பட்ட 500 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்ட விசாரணையில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
April மாதம் ஆரம்பமான விசாரணையின் பின்னர் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
திருட்டு மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பதாக நம்பப்படும் ஒரு நபர் தொடர்பாக Toronto காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
தேடுதல் ஆணையின் விளைவாக, $27,000 மதிப்புள்ள சுமார் 500 திருடப்பட்ட மதுபான போத்தல்களை அதிகாரிகள் மீட்டனர்.
இதில் 66 வயதான விக்னேஸ்வரராஜா மயில்வாகனம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்ட இவர் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
