தேசியம்
செய்திகள்

கனடாவின் இனவெறி எதிர்ப்பு திட்டம் வெளியானது

கனடாவின் 2024- 2028 இனவெறி எதிர்ப்பு திட்டம் வெளியாகியுள்ளது.

இனவெறி, பாகுபாடுகளுக்கு எதிரான திட்டமாக இது அமைகிறது.

கனடாவின் பன்முகத்தன்மை, உள்ளடக்கம், மாற்றுத் திறனாளிகள் அமைச்சர் Kamal Khera இந்த திட்டத்தை சனிக்கிழமை (08) வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சர் கரி ஆனந்தசங்கரியும் கலந்து கொண்டார்.

மாற்றும் அமைப்புகள், வாழ்க்கையை மாற்றுதல்: கனடாவின் இனவெறி எதிர்ப்பு திட்டம் 2024 – 2028 என இந்த திட்டம் பெயரிடப்பட்டுள்ளது.

அமைச்சர் Kamal Khera, அமைச்சர் கரி ஆனந்தசங்கரி

கனடாவின் புதிய இனவெறி எதிர்ப்பு திட்டம் வேலை வாய்ப்பு, நீதி, சட்ட அமலாக்கம், வீட்டு வசதி, சுகாதாரம், குடியேற்ற அமைப்புகளில் உந்து நடவடிக்கையை நோக்கமாகக் கொண்ட $110.4 மில்லியன் முதலீடு ஆகும்.

கனடிய அரசாங்கம் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் ஆகிய விடயங்களில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் Kamal Khera தெரிவித்தார்.

கனடாவையும் உலகையும் ஒரு சிறந்த இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம் எனவும் அவர் கூறினார்.

Related posts

Quebec மாகாணத்தில் இரு மொழி நிலையை தொடர்ந்து வைத்திருக்க நடவடிக்கை

Lankathas Pathmanathan

COVID தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

ரஷ்ய தூதரக நிகழ்வில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது தவறு: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan

Leave a Comment