தெற்கு Vancouver நகரில் நிகழ்ந்த Filipino வீதி திருவிழா வாகன தாக்குதலினால் கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
Filipino வீதி திருவிழாவில் சனிக்கிழமை (26) இரவு நிகழ்ந்த வாகன தாக்குதலில் 11 பேர் பலியாகினர் – குறைந்தது 20 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பயங்கரவாத செயல் அல்ல என உறுதியாக நம்புவதாக Vancouver காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் கனடியர்களுக்கு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என பிரதமர் Mark Carney கூறினார்.
தேசிய பாதுகாப்பு, புலனாய்வு ஆலோசகர், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் நிலைமை குறித்து தனக்கு விளக்கமளித்ததாகவும் பிரதமர் கூறினார்.
இந்தத் தாக்குதல் குறித்து Mark Carney தவிர, Conservative தலைவர் Pierre Polievre, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் அறிக்கைகளை வெளியிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் காரணமாக, தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் கட்சித் தலைவர்கள் தங்கள் நிகழ்வுகளை மாற்றியமைக்க கட்டாயப்படுத்தியது.
இந்தத் தாக்குதலை அடுத்து, Calgary , Richmond, B.C. ஆகிய நகரங்களில் நடைபெற இருந்த பிரச்சார பேரணிகளை Liberal கட்சி இரத்து செய்தது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 30 வயதான Kai-Ji Adam Lo கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.
