தேசியம்
செய்திகள்

Winnipeg காவல்துறையால் மாணவர் சுட்டுக் கொலை

Winnipeg காவல்துறையால் புத்தாண்டிற்கு முன் தினம் வெளிநாட்டில் இருந்து கனடாவில் கல்வி கற்க வந்த மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் 19 வயதான Afolabi Stephen Opaso என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நைஜீரியாவைச் சேர்ந்த இவர் Manitoba பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது குடும்பத்திற்கு உதவும் Winnipeg வழக்கறிஞர் Jean-René-Dominique Kwilu இந்த தகவலை உறுதிப்படுத்தினார்

December 31 மதியம் 2:20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து Manitobaவின் சுயாதீன புலனாய்வுப் பிரிவுக்கு (Independent Investigation Unit of Manitoba – IIU) Winnipeg  காவல்துறையினர் அறிவித்தனர்.

Related posts

Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனையில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Ontario அரசாங்கத்திற்கும் கல்வி தொழிற்சங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள்

Lankathas Pathmanathan

March மாதம் Moderna, 1.3 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment