September 16, 2026
தேசியம்
செய்திகள்

Winnipeg காவல்துறையால் மாணவர் சுட்டுக் கொலை

Winnipeg காவல்துறையால் புத்தாண்டிற்கு முன் தினம் வெளிநாட்டில் இருந்து கனடாவில் கல்வி கற்க வந்த மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் 19 வயதான Afolabi Stephen Opaso என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நைஜீரியாவைச் சேர்ந்த இவர் Manitoba பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது குடும்பத்திற்கு உதவும் Winnipeg வழக்கறிஞர் Jean-René-Dominique Kwilu இந்த தகவலை உறுதிப்படுத்தினார்

December 31 மதியம் 2:20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து Manitobaவின் சுயாதீன புலனாய்வுப் பிரிவுக்கு (Independent Investigation Unit of Manitoba – IIU) Winnipeg  காவல்துறையினர் அறிவித்தனர்.

Related posts

இடியுடன் கூடிய மழையின் காரணமாக தெற்கு Ontarioவில் மூவர் பலி

$25 பில்லியன் தேசிய இறையாண்மை நிதி அறிவிப்பு

Lankathas Pathmanathan

Ontario வரலாற்றில் மிகப்பெரிய வரவு செலவு திட்டம்!

Lankathas Pathmanathan

Leave a Comment