தேசியம்
செய்திகள்

காசாவில் உள்ள கனேடியர்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவ கனடா புதிய நடவடிக்கை

காசாவில் உள்ள கனேடியர்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவ கனடா புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.

கனடாவுடன் தொடர்புள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேற அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பிரதமர் வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.

இது மிகவும் கடினமான சூழ்நிலை என்பதை உறுதிப்படுத்திய Justin Trudeau, கனடிய குடிமக்கள், அவர்களது குடும்பங்களை காசாவிலிருந்து வெளியேற்றுவதற்கு தொடர்ந்து கடினமாக உழைத்து வருவதாகவும் கூறினார்.

இதுவரை 600க்கும் மேற்பட்ட கனடிய குடிமக்கள், அல்லது அவர்களது குடும்பங்கள் காசாவிலிருந்து வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல் குறித்து கனடா ஆழ்ந்த கவலையில் உள்ளதாக
குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Marc Miller கூறினார்.

வியாழக்கிழமை (21) முதல் கனடாவில் கட்டண விலக்கு கல்வி அனுமதி அல்லது பணி அனுமதி பத்திரங்களை பெறும் நடைமுறைகளை குடிவரவு அமைச்சர் அறிவித்தார்.

Related posts

50 சதவீதத்துக்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 1ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சிகளில் தலைவர்கள்!

Gaya Raja

Leave a Comment