முன்னாள் NDP தலைவர் Jagmeet Singh, 2023 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்க முகவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரால் குறிவைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
பத்திற்கும் மேற்பட்ட கனடிய சீக்கியர்கள் தங்கள் உயிருக்கு தீவிர அச்சுறுத்தல்களின் கீழ் வாழ்கின்றனர் என உலக சீக்கிய அமைப்பு எச்சரிக்கிறது.
இதில் முன்னாள் NDP தலைவரும் ஒருவர் என சந்தேகிக்கப்படுகிறது.
Jagmeet Singh-கை ஒரு சந்தேகத்திற்குரிய இந்திய அரசாங்க முகவர் நெருக்கமாகக் கண்காணித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
RCMP-யை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியானது.
இந்த நிலையில், கனடிய சீக்கியர்களுக்கான அச்சுறுத்தல்கள் இந்தியாவிலிருந்து உருவாகின்றன என உலக சீக்கிய அமைப்பின் செய்தித் தொடர்பாளர் Balpreet Singh கூறினார்.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு வியாழக்கிழமை (12) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
அடுத்த வாரம் Alberta மாகாணத்தில் நடைபெறும் G7 கூட்டத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கனடிய மத்திய அரசு அழைப்பது நியாயமற்றது என இந்தக் குழு வாதிடுகிறது.
இந்தியாவுடனான உளவுத்துறை பகிர்வை நிறுத்தவும், இந்திய ஜனாதிபதிக்கான G7 கூட்ட அழைப்பை இரத்து செய்யவும் கனடாவை கோருகிறது.
கனடாவில் இந்திய வெளிநாட்டு தலையீடு, நாடு கடந்த அடக்குமுறையை குறிவைத்து கனடிய அரசாங்கம் ஒரு பொது விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
முன்னாள் NDP தலைவர் Jagmeet Singh, 2023 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்க முகவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரால் குறிவைக்கப்பட்டதாக வியாழன் காலை செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
