தேசியம்
செய்திகள்

Calgaryயில் E. coli நோய் தொற்று 264ஆக அதிகரிப்பு

Calgaryயில் முறையிடப்பட்ட E. coli நோய் தொற்று எண்ணிக்கை 264ஆக அதிகரிக்கிறது.

பல Calgary குழந்தை பராமரிப்பு நிலையங்களில் ஏற்பட்ட நோய் தொற்று எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கின்றது.

திங்கட்கிழமை (11) 231 பேராக அறிவிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (12) 264 பேராக அதிகரித்துள்ளது.

விசாரணை தொடரும் நிலையில் இந்த தொற்று பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தற்போது 25 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Alberta மாகாணம் ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவர்களில் 22 நோயாளிகள் E. coli தொற்றுக்கு பின்னர் சிறுநீரகத்தைப் பாதிக்கும் ஒரு நோயை எதிர்கொள்கின்றனர்.

Related posts

சனிக்கிழமை கைவிடப்படும் அனைத்து COVID எல்லைக் கட்டுப்பாடுகளும்

Lankathas Pathmanathan

இந்த வாரம் 2.9 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja

Trans-கனடா நெடுஞ்சாலை Carbon வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கும் RCMP

Lankathas Pathmanathan

Leave a Comment