தேசியம்
செய்திகள்

Calgaryயில் E. coli நோய் தொற்று 264ஆக அதிகரிப்பு

Calgaryயில் முறையிடப்பட்ட E. coli நோய் தொற்று எண்ணிக்கை 264ஆக அதிகரிக்கிறது.

பல Calgary குழந்தை பராமரிப்பு நிலையங்களில் ஏற்பட்ட நோய் தொற்று எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கின்றது.

திங்கட்கிழமை (11) 231 பேராக அறிவிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (12) 264 பேராக அதிகரித்துள்ளது.

விசாரணை தொடரும் நிலையில் இந்த தொற்று பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தற்போது 25 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Alberta மாகாணம் ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவர்களில் 22 நோயாளிகள் E. coli தொற்றுக்கு பின்னர் சிறுநீரகத்தைப் பாதிக்கும் ஒரு நோயை எதிர்கொள்கின்றனர்.

Related posts

அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட Conservative தலைவருக்கு அழைப்பு!

Lankathas Pathmanathan

NDPயின் அவசர விவாத கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்

Lankathas Pathmanathan

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் உலக Junior hockey வீரர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment