தேசியம்
செய்திகள்

Calgaryயில் E. coli நோய் தொற்று 264ஆக அதிகரிப்பு

Calgaryயில் முறையிடப்பட்ட E. coli நோய் தொற்று எண்ணிக்கை 264ஆக அதிகரிக்கிறது.

பல Calgary குழந்தை பராமரிப்பு நிலையங்களில் ஏற்பட்ட நோய் தொற்று எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கின்றது.

திங்கட்கிழமை (11) 231 பேராக அறிவிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (12) 264 பேராக அதிகரித்துள்ளது.

விசாரணை தொடரும் நிலையில் இந்த தொற்று பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தற்போது 25 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Alberta மாகாணம் ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவர்களில் 22 நோயாளிகள் E. coli தொற்றுக்கு பின்னர் சிறுநீரகத்தைப் பாதிக்கும் ஒரு நோயை எதிர்கொள்கின்றனர்.

Related posts

உக்ரைன் குறித்து விவாதிக்கும் கனடிய –  அமெரிக்கா

Lankathas Pathmanathan

சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை தோல்வி

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டு குற்றத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட 6 பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment