தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்தும் அழைப்பு விடுத்துள்ளன.

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் David Johnstonனின் அறிக்கை செவ்வாய்க்கிழமை (23) வெளியானது.

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக David Johnston பரிந்துரைத்துள்ளார்.

கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து பொது விசாரணை அவசியமில்லை என David Johnston தெரிவித்தார்.

இந்த விடயத்தில் கனடியர்களுடன் தொடர்ச்சியான பொது உரையாடல்களை நடத்த David Johnston தகுந்த நபர் அல்ல என Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்.

பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்காத David Johnstonனின் முடிவு ஏமாற்றமளிக்கிறது என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.

இந்த தினத்தை கனடிய ஜனநாயகத்திற்கு ஒரு சோகமான நாள் என Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் Alain Therrien கூறினார்.

David Johnston இந்த விசாரணைக்கு பரிந்துரைத்தால், ஒரு விசாரணைக்கு ஆதரவளிப்பதாக அரசாங்ம் தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சர்கள் மூவர் இராஜதந்திர நியமனங்களை பெறுகின்றனர்?

Lankathas Pathmanathan

இருவரின் உடல்கள் N.S. கரையோரம் மீட்பு

Lankathas Pathmanathan

தேர்தலில் வெளிநாட்டு அரசாங்கம் எனக்கு உதவவில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong

Lankathas Pathmanathan

Leave a Comment