தேசியம்
செய்திகள்

சீன இராஜதந்திரிகளை வெளியேற்றுவது குறித்து ஆராயும் கனடா?

நாடாளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் விடயத்தில் விளக்கமளிக்க சீனத் தூதருக்கு கனடிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

வியாழக்கிழமை (04) நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்த தகவலை வெளியிட்டார்.

Torontoவில் உள்ள சீன இராஜதந்திரி ஒருவர் Conservative நாடாளுமன்ற உறுப்பினர், அவரது குடும்பத்தினரை மிரட்டும் சதியில் ஈடுபட்டதாக கனடாவின் உளவுதுறையின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளிக்க Liberal அரசாங்கம் சீனாவின் தூதரை வரவழைத்து உள்ளது.

கனடா தனது விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை ஏற்றுக்கொள்ளாது என சீனத் தூதரிடம் தெளிவுபடுத்துமாறு தனது துணை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக அமைச்சர் Melanie Joly கூறினார்.

சீனாவின் Toronto தூதரகத்தில் பணிபுரியும் இராஜதந்திரி ஒருவர் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong, Hong Kongகில் உள்ள அவரது உறவினர்களை குறிவைத்ததாக கனேடிய பாதுகாப்பு புலனாய்வு பிரிவு நம்புவதாக வெளியான ஊடக அறிக்கைகளை Melanie Joly உறுதிப்படுத்தினார்.

இந்த விடயம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் இன்று நாடாளுமன்ற வெளியுறவு குழுவிடம் கூறினார்.

குறிப்பிட்ட இராஜதந்திரியை கனடாவில் இருந்து வெளியேற்ற அரசாங்கத்தை எதிர்க்கட்சியான Conservative கட்சி வலியுறுத்தி வருகின்றது.

இந்த விடயத்தில் இராஜதந்திரிகளை வெளியேற்றுவது உள்ளிட்ட அனைத்து விளைவுகளையும் ஆராய்ந்து வருவதாக Melanie Joly கூறினார்.

Related posts

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்கு பயண எச்சரிக்கை

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது

Lankathas Pathmanathan

Markham இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்ட தமிழர்!

Lankathas Pathmanathan

Leave a Comment