தேசியம்
செய்திகள்

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகள் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும்: Chrystia Freeland

கனடியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகள் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland வெள்ளிக்கிழமை (05) இந்த தகவலை வெளியிட்டார்.

ஆனாலும் இந்த கொடுப்பனவுகள் தகுதியான கனடியர்களின் வங்கிக் கணக்குகளில் July மாதம் வரை வைப்பிலிடப்படாது என கனடிய வருமான வரித்துறை தெரிவிக்கின்றது.

இந்த கொடுப்பனவை எட்டு வாரங்களில் வழங்க திட்டமிட்டுள்ளதாக CRA உறுதிப்படுத்தியது.

இந்த கொடுப்பனவு கடந்த March மாதம் வெளியான மத்திய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

Related posts

இஸ்ரேல்-காசா போரில் ஏழு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

Freeland துன்புறுத்தப்பட்டது குறித்து RCMP விசாரணை

Lankathas Pathmanathan

கனடிய தூதரக அலுவலகத்தை  மூட அமெரிக்கா முடிவு?

Lankathas Pathmanathan

Leave a Comment