தேசியம்
செய்திகள்

Pearson விமான நிலையத்தில் 20 மில்லியன் டொலர் கொள்ளை

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த 20 மில்லியன் டொலர் கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் விவரம் வெளியிட்டனர்.

தங்கம் உட்பட, அதிக மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Pearson சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பின்னர் இந்த திருட்டு நிகழ்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (17) இந்தத் திருட்டு இடம்பெற்றதாக Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை கைதுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேவேளை சந்தேக நபர்கள் குறித்த எந்த தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.

Related posts

Alberta பிரிவினைவாத இயக்கம் குறித்து மன்னருடன் உரையாடல்?

Lankathas Pathmanathan

தேர்தல் குறுக்கீடு குறித்து RCMP விசாரிக்கவில்லை

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: கடந்த Olympic போட்டியை விட அதிக பதக்கங்களை வெற்றி பெறும் நிலையில் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment