தேசியம்
செய்திகள்

Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

கடந்த வாரம் Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என Quebecகின் பொது பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.

21 வயதான Nicous D’Andre Spring, கடந்த சனிக்கிழமை (24) Montreal சிறையில் இறந்தார்.

அவர் மரணமடைந்ததற்கு முந்தைய நாள் சிறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

பிணை விசாரணையை தொடர்ந்து December மாதம் 23ஆம் திகதி அவர் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் அவர் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டார் எனவும் அமைச்சு உறுதிப்படுத்துகிறது.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணைக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இவரது மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி தற்காலிகமாக அவரது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அமைச்சு புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில் பலியான Nicous D’Andre Springகை நினைவு கூறும் வகையில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வு நாளை மாலை Montreal பூங்கா ஒன்றில் நடைபெறவுள்ளது.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையம் 2027ம் ஆண்டில் திறந்து வைக்கப்படும்!

Lankathas Pathmanathan

பிரதமரின் Jamaica விடுமுறை குறித்து மீண்டும் எழும் கேள்விகள் !

Lankathas Pathmanathan

Leave a Comment