தேசியம்
செய்திகள்

COVID விதிகளை மீறியதற்காக $15 மில்லியன் அபராதம்

COVID தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக கனடியர்களுக்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாக தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.

2022 இல் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Eric Duncan முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தரவுகளை பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டது.

ஆனாலும் இந்த அபராதத்தில் செலுத்தப்பட்ட தொகையில் குறித்த தரவுகள் எதுவும் வெளியாகவில்லை.

January முதல் August மாதம் வரை மத்திய தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் 3,614 அபராத சீட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த எட்டு மாத காலத்தில் Ontario மாகாணத்தில் மாத்திரம் 2,672 அபராத சீட்டுகள் வழங்கப்பட்டன.

பொது சுகாதார நிறுவன தரவுகளில் British Columbia, Ontario, Manitoba, Atlantic கனடா ஆகியவை அடங்குகின்றன.

இதில் Quebec, Saskatchewan, Alberta அல்லது territories என்ப்படும் பிரதேசங்களின் தரவுகள் உள்ளடக்கப்படவில்லை.

Related posts

கனடிய வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது அவசரகாலச் சட்டம்

Lankathas Pathmanathan

மக்களை வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு குறித்து பரிசீலிக்கும் Ontario அமைச்சரவை!

Gaya Raja

Ontarioவின் அடுத்த முதல்வராகும் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் Marit Stiles!

Lankathas Pathmanathan

Leave a Comment