தேசியம்
செய்திகள்

COVID விதிகளை மீறியதற்காக $15 மில்லியன் அபராதம்

COVID தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக கனடியர்களுக்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாக தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.

2022 இல் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Eric Duncan முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தரவுகளை பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டது.

ஆனாலும் இந்த அபராதத்தில் செலுத்தப்பட்ட தொகையில் குறித்த தரவுகள் எதுவும் வெளியாகவில்லை.

January முதல் August மாதம் வரை மத்திய தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் 3,614 அபராத சீட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த எட்டு மாத காலத்தில் Ontario மாகாணத்தில் மாத்திரம் 2,672 அபராத சீட்டுகள் வழங்கப்பட்டன.

பொது சுகாதார நிறுவன தரவுகளில் British Columbia, Ontario, Manitoba, Atlantic கனடா ஆகியவை அடங்குகின்றன.

இதில் Quebec, Saskatchewan, Alberta அல்லது territories என்ப்படும் பிரதேசங்களின் தரவுகள் உள்ளடக்கப்படவில்லை.

Related posts

680,000த்தை இன்று தாண்டிய COVID தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

NBA வெற்றிக் கிண்ணத்திற்கான தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Raptors அணி

Lankathas Pathmanathan

கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் அமைப்பாளர் தொடர்ந்து சிறையில்

Lankathas Pathmanathan

Leave a Comment