September 7, 2026
தேசியம்
செய்திகள்

Ontarioவில் 11 ஆயிரம் பேர் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலையில்

Ontario மாகாணத்தில் 11,000 பேருக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்வதாக Hydro One செவ்வாய்க்கிழமை (27) மாலை தெரிவித்தது.

கடந்த வாரம் குளிர்காலப் புயல் ஆரம்பித்ததில் இருந்து Ontarioவில் 430,000 மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (26) வெளியிடப்பட்ட அறிக்கையில் Hydro One தெரிவித்துள்ளது.

Ontario மாகாணத்தின் Niagara பகுதிக்கு December மாதம் 24ஆம் திகதி அறிவிக்கப்பட்ட அவசர நிலை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

Parry Sound நகருக்கான பனிமூட்டம் எச்சரிக்கை சுற்றுச்சூழல் கனடாவினால் செவ்வாய் பிற்பகல் விடுக்கப்பட்டது.

Barrie, Grey-Bruce நகரங்களுக்கும் செவ்வாய் பனி மூட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பனிப்புயல் காரணமாக எதிர்கொள்ளப்பட்ட தாமதத்திற்கு பின்னர் முக்கிய வழித்தடத்தில் புகையிரத சேவையை Via Rail மீண்டும் ஆரம்பித்துள்ளது.

சனிக்கிழமையன்று, CN புகையிரதம் தடம் புரண்டதை அடுத்து, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் Toronto – Ottawa, Toronto – Montreal புகையிரத சேவையை Via Rail இரத்து செய்திருந்தது.

இந்த சேவைகள் செவ்வாய் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

Related posts

இரண்டு நாடுகளுக்கான சாத்தியத்தை இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் அதிகரித்துள்ளது?

Lankathas Pathmanathan

James Smith Cree முதல் குடியிருப்புக்கு அமைச்சர் Mendicino விஜயம்

Lankathas Pathmanathan

கடவுச்சீட்டுக்கு போலி பயணத் திட்டங்களை தவிருங்கள்: அமைச்சர் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment