தேசியம்
செய்திகள்

பிரதமருக்கும் Quebec முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இரத்து

கனடிய பிரதமருக்கும் Quebec முதல்வருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற இருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.

Justin Trudeauவுக்கும் François Legaultடிக்கும் இடையிலான இந்த சந்திப்பு Montreal நகரில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

கடந்த சில நாட்களாக Ontario, Quebec உட்பட பல மாகாணங்களில் தொடரும் பனிப்புயல் காரணமாக இந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.

சுகாதார இடமாற்றங்கள், குடியேற்றம் போன்ற விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் விவாதிக்க இருந்தனர்

இந்த நிலையில் இருவரும் தொலைபேசியில் உரையாடுவார்கள் என தெரிவித்த பிரதமரின் பேச்சாளர், பின்னர் ஒரு நாளில் நேரடி சந்திப்பு ஏற்பாடாகும் என கூறினார்.

Related posts

அவசர காலச் சட்டத்தை செயல்படுத்தியதற்கான மத்திய அரசின் முடிவு சரியானது!

Lankathas Pathmanathan

சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்க வன்முறை கும்பல்களை பயன்படுத்தவில்லை: கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய மறுப்பு

Lankathas Pathmanathan

September இறுதிக்குள் அனைத்து கனடியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment